புதன், 19 டிசம்பர், 2012

ஆதலின் காதல் செயவீர்



 கண்கள் உள்ள மட்டும் 
காதலை உணவாய் கொள்ளும் 
இன்ப நினைவு இதயம் வேண்டும் ...

பார்வை  யால் இதயம் 
கொய்யும் பாவையோன்றை 
கண்டு காதல் கொள்ள வேண்டும்...

காதலின் வேதியலில் 
ஹார்மோன்கள் மௌனம்கொள்ளாது 
வினை செய்து 
வேதி வினைக்கு தள்ளி 
காதல்கொள்ளல் வேண்டும்....

எனக்கு மட்டும்தான் தெரியும் 
ஓடும் இரத்தம் 
உனக்கானதொடுதலுக்கு 
காத்திருந்து பொறுமையின்றி 
ஓடுகிறது என்று....

புரிதலின் இன்பம் சுவையானது 
இருபாலினத்தின் புரிதல் காதலாகும் 

 காதலின் இன்பம் ஊடலாகும் 
ஊடலின்  இறுதி காதலாகும் 

இந்தசுழர்ச்சியில் காதல் சுரக்கும் 
சுரப்பி யெதுவெனக்கான 
நவீன காதலை 
தொன்மையுடன் 
இன்பம் காணும் 
காதல் வேண்டும் ..

வியாழன், 21 ஜூன், 2012

காதலை யேனடி மறைத்து கொண்டாய்

உன் சிரிபுலகில்
நான் சுந்தரனானேன்....
என்னை பார்க்கும் 
உன் ஓர விழிகளுக்குள் 
நான் குவியலானேன்..
காதலை உன் கண்ணிலும் 
மௌனத்தை உதட்டிலும் கிடத்தி 
என்ன தேடுகிறாய் உன்னில்..
என்னை முழுதும் 
ஆட்கொண்ட    பின்
என்ன தேடுகிறாய் என்னில்....

வெள்ளி, 15 ஜூன், 2012

மீண்டும் உன்னை காதலிக்கிறேன்,,,,,,




வார்த்தைகளுக்கு வர்ணம் பூசி  காதலை சொல்ல ஆசை செயற்கை அழகல்ல ஆதலின் அப்படியே காதலிக்கிறேன் நீ பார்க்கும் யாவும் என்னை நினைவுட்ட    நி மட்டும் கண்கெட்ட மனிதம் மானாய் என்னை உனது இதயத்தில் வைத்துவிட்டு என் உடலை மட்டும் காதல் தீயிலிட்டாய் பொசுங்கும் என் உடல் சாம்பல் உன்னிடம் சொல்லும் நான் மீண்டும் காதலிக்கிறேன்

வெட்கம் உனது மொழியானால்..


முதல் முறை பார்க்கையில்,,
வெட்கப்பட்டு ...
சுவரோரம்
உன் தாமரை முகம் 
மறைத்தாய்..
வெட்கப்பட்டது 
உன் பெண்மை மட்டுமல்ல
என் ஆண்மையும் தான்...

காதலனாய் மாற 
கள்வனாய் மாறிவிட்டேன் 
உன் இதயத்தை திருடியவுடன் ...

ஞாயிறு, 3 ஜூன், 2012

ஆசை


பதிவிறக்கம் செய்ய  தூண்டுகிறது.. உனது இதழ்கள்..

இரண்டு ஹைக்குவாய்
உனதிரண்டு   மர்மம்
என்னை  கவர்த்திலுக்கும்
காந்தங்கள் .. 

இரண்டு ஹைக்குவாய்
உனதிரண்டு   மர்மம்
என்னை  கவர்த்திலுக்கும்
காந்தங்கள் .. 

காதலை முழுவதும் 
உன் மூக்கின்மேல்  
வைத்து கொண்டாய்..

உள்ளிழுக்கும் மூச்சாய்
என் உயிரையும் 
வெளியிடும் மூச்சாய்
உன் காதலையும்
பரிமாறிக்கொள்ள
ஆசை.. 




உன்னை அழகாய் ஆராதிக்கிறேன





உன் அங்கங்கள்
ஒவ்வொன்றாய்
அப்படியே வர்ணித்து விட
வார்த்தைகள் தேடுகிறேன்..


ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதத்தில்
அழகாய் தெரிய
வார்த்தைகள் மட்டும்
அழகாய் கிட்டவில்லை
ஆதலின் என்
தமிழுக்கு
அழகு செய்ய
உன்னை அழகாய் ஆராதிக்கிறேன...!!

ஞாயிறு, 18 மார்ச், 2012

நாட்க்குறிப்பு

வெறுமையான நாட்களை
 செம்மையாக்கவும்....
 மேலும் பல
 செயல் திட்டமிட....
 சொர்க்களஞ்சியம் சேர்க்க..
 எண்ணம்மியம்ப....
 ஊர்ப்பறவை யினம்கான...
 பிரிதொருநாள்
 பயன்கான....
 வெறும் வாய்
 அசைத்தாடி
 புற்றிசலாய் வரும்
 கவிக்கான...
 தெரிந்தவை பகன்று..
 தெரியாதன வினவி....
 பாடல் பேசும்
 வாய் தடுத்து...
 எழுதுகோல்  கோலமிட்டு
 குட்டி
 குட்டி
 எழுத்துக்களால்
 வண்ண
 வண்ண
 கனவு சேர்த்து
 தினம் தோறும்
 ஞாபக நரம்புகளை
 நான் ஏற்றி
 உணர்சிகளால் வில் சமைத்து..
 காகிதம் ஏற்றிடவும்..
 படித்து நகைத் திடவும் ...
 எழுதிட வேண்டும்
 நாட்க்குறிப்பு....