புதன், 19 டிசம்பர், 2012

ஆதலின் காதல் செயவீர்



 கண்கள் உள்ள மட்டும் 
காதலை உணவாய் கொள்ளும் 
இன்ப நினைவு இதயம் வேண்டும் ...

பார்வை  யால் இதயம் 
கொய்யும் பாவையோன்றை 
கண்டு காதல் கொள்ள வேண்டும்...

காதலின் வேதியலில் 
ஹார்மோன்கள் மௌனம்கொள்ளாது 
வினை செய்து 
வேதி வினைக்கு தள்ளி 
காதல்கொள்ளல் வேண்டும்....

எனக்கு மட்டும்தான் தெரியும் 
ஓடும் இரத்தம் 
உனக்கானதொடுதலுக்கு 
காத்திருந்து பொறுமையின்றி 
ஓடுகிறது என்று....

புரிதலின் இன்பம் சுவையானது 
இருபாலினத்தின் புரிதல் காதலாகும் 

 காதலின் இன்பம் ஊடலாகும் 
ஊடலின்  இறுதி காதலாகும் 

இந்தசுழர்ச்சியில் காதல் சுரக்கும் 
சுரப்பி யெதுவெனக்கான 
நவீன காதலை 
தொன்மையுடன் 
இன்பம் காணும் 
காதல் வேண்டும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக