ஞாயிறு, 18 மார்ச், 2012

நாட்க்குறிப்பு

வெறுமையான நாட்களை
 செம்மையாக்கவும்....
 மேலும் பல
 செயல் திட்டமிட....
 சொர்க்களஞ்சியம் சேர்க்க..
 எண்ணம்மியம்ப....
 ஊர்ப்பறவை யினம்கான...
 பிரிதொருநாள்
 பயன்கான....
 வெறும் வாய்
 அசைத்தாடி
 புற்றிசலாய் வரும்
 கவிக்கான...
 தெரிந்தவை பகன்று..
 தெரியாதன வினவி....
 பாடல் பேசும்
 வாய் தடுத்து...
 எழுதுகோல்  கோலமிட்டு
 குட்டி
 குட்டி
 எழுத்துக்களால்
 வண்ண
 வண்ண
 கனவு சேர்த்து
 தினம் தோறும்
 ஞாபக நரம்புகளை
 நான் ஏற்றி
 உணர்சிகளால் வில் சமைத்து..
 காகிதம் ஏற்றிடவும்..
 படித்து நகைத் திடவும் ...
 எழுதிட வேண்டும்
 நாட்க்குறிப்பு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக